தற்காலிக பட்டாசு கடைகள்: 308 இடங்களில் செயல்பட அனுமதி:
tirupur 308 temporary firecracker shops allowed operate
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைகள் அமைப்பதற்கு திருப்பூர் மாநகர, புறநகர் பகுதிகளில் பலரும் விண்ணப்பித்தனர்.
அதில் மாநகர காவல் நிலையத்திற்கு எல்லைக்கு உட்பட்ட 129 பேர், மாவட்ட போலீஸ் காவல் நிலையத்திற்கு உட்பட்ட புறநகர் பகுதியில் 195 பேர் என மாவட்டத்தில் மொத்தம் 324 பேர் தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விண்ணப்பித்தனர்.
கடந்த ஒரு வாரமாக போலீசார் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்கப்படும் பகுதி பாதுகாப்பானதா, உரிய சான்றுகள் இணைக்கப்பட்டுள்ளதா என கள ஆய்வு மேற்கொண்டு வந்தனர்.

அதன் பிறகு மாநகர பகுதியில் 129 கடைகளுக்கு காவல் கமிஷனர் அனுமதி அளித்துள்ளார். புறநகரில் விண்ணப்பிக்கப்பட்ட 16 விண்ணப்பங்கள் பல்வேறு காரணங்களால் நிராகரிக்கப்பட்டது.
இதனை அடுத்து 179 கடைகளுக்கு புறநகர் பகுதிகளில் அனுமதி வழங்க மாவட்ட ஆட்சியருக்கு எஸ்.பி. பரிந்துரை செய்துள்ளார். இது போல் மாவட்டம் முழுவதும் சுமார் 308 கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த கடைகள் இன்று முதல் ஒரு வாரத்திற்கு செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
English Summary
tirupur 308 temporary firecracker shops allowed operate