திருப்பத்தூர் | துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு துப்புரவு பணியாளர் தற்கொலை! - Seithipunal
Seithipunal


கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி உயிரிழந்து விட்டார். இந்நிலையில் குப்புசாமி தனது 3 மகன்களுடன் வசித்து வந்தார். 

நேற்று மாலை குப்புசாமி தனது வீட்டில் தனியாக இருந்த போது திடீரென துப்பாக்கி சூடும் சத்தம் கேட்டது. இதனால் பதறிப்போன அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்து பார்த்தபோது குப்புசாமி நாட்டு துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. 

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஆம்பூர் தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குப்புசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கு பயன்படுத்திய நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். 

மேலும் குப்புசாமிக்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது எனவும் தற்கொலைக்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tirupathur cleaning worker committed suicide


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->