திருவண்ணாமலை : மாசி மாத பௌர்ணமி கிரிவலம் நாளை தொடக்கம்.. உகந்த நேரம் எப்போது?
Thuruvannamalai masi month Pournami Girivalam tomorrow
திருவண்ணாமலை மாசி மாத கிரிவலம் நாளை இரவு தொடங்குகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
மேலும், ஒவ்வொரு மாத பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று கோவிலில் சாமி தரிசனம் செய்வார்கள்.

இந்த நிலையில் மாசி மாதத்திற்கான பவுர்ணமி நாளை திங்கட்கிழமை காலை 5.08 மணிக்கு தொடங்கி, நாளை மறுநாள் (மார்ச் 6ம் தேதி) செவ்வாய்க்கிழமை காலை 6.45 மணிக்கு நிறைவடைகின்றது.
இந்த குறிப்பிட்ட நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம். மேலும், பக்தர்கள் கிரிவலம் செல்வதையொட்டி அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.
மேலும், பவுர்ணமியை முன்னிட்டு கோவிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் 2 நாட்களுக்கு அமர்வு தரிசனம் மற்றும் சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary
Thuruvannamalai masi month Pournami Girivalam tomorrow