கன்னியாகுமரியில் சோகம் : ஒரே வீட்டில் அழுகிய நிலையில் கிடந்த உடன்பிறப்புகள் - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரியில் சோகம் : ஒரே வீட்டில் அழுகிய நிலையில் கிடந்த உடன்பிறப்புகள் - நடந்தது என்ன?

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள, திங்கள்சந்தை அருகே தாத்தவிளை பகுதியைச் சேர்ந்தவர் பாபு. பெயிண்டராக பணிபுரியும் இவருக்கு உஷா தேவி, ஸ்ரீதேவி என்று இரண்டு சகோதரிகள் உள்ளனர். 

இந்தநிலையில் பாபு வீட்டில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது. இதை உணர்ந்த அப்பகுதி மக்கள் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அந்தத் தகவலின் படி விரைந்து வந்த போலீஸார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். 

அங்கு பாபு ஒரு அறையிலும், சகோதரிகளில் ஒருவர் சமையல் அறையில் தூக்கிட்ட படியும், மற்றொருவர் படுத்தது போன்றும் இறந்து கிடந்துள்ளனர். இதையடுத்து போலீசார் இவர்கள் மூன்று பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதில், "இவர்கள் மூன்று பேருக்கும் திருமணம் ஆகவில்லை என்பதும், கடைசியாக கடந்த ஞாயிற்றுக் கிழமை வீட்டு உரிமையாளருக்கு வாடகை கொடுப்பதற்காக பாபு வெளியில் வந்ததும், அதன் பின்னர் அவர் வெளியிலேயே வரவில்லை என்பதும் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து போலீசார் இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து மூவரின் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

three peoples died in kanniyakumari


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->