கட்டுப்பாட்டை இழந்த கார் : பறிபோன மூன்று உயிர் - காரைக்குடியில் நேர்ந்த சோகம்.!!  - Seithipunal
Seithipunal


கட்டுப்பாட்டை இழந்த கார் : பறிபோன மூன்று உயிர் - காரைக்குடியில் நேர்ந்த சோகம்.!! 

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை அருகே வாக்குடி பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் காரில் கரூருக்கு சென்றுவிட்டு மீண்டும் தனது சொந்த ஊருக்கு திரும்பி வந்துக்கொண்டிருந்தார். 

இதையடுத்து இவர் அமராவதிபுதூர் அருகே வந்துக் கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கணேசன், மனைவி மற்றும் வர்களின் இரண்டு வயது பெண் குழந்தை உள்ளிட்ட மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

மேலும் இந்த காரை ஒட்டி வந்த ஓட்டுநர் படுகாயமடைந்தார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் சம்பவம் தொடர்பாக போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் படி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயமடைந்த ஓட்டுனரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பின்னர் விபத்தில் பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

three peoples died for accident in karaikudi


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->