மதுபோதையில் ரகளை செய்த தாய் - ஆத்திரத்தில் கொலை செய்த மகன் உள்பட 3 கைது.! - Seithipunal
Seithipunal


மதுபோதையில் ரகளை செய்த தாய் - ஆத்திரத்தில் கொலை செய்த மகன் உள்பட 3 கைது.!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபம் அருகே வளையர்வாடி நாடார் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயா. இவருடைய கணவர் செல்வம் மங்களூரில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருவதால், ஜெயா தனது பிள்ளைகளுடன் குடியிருந்து வந்துள்ளார். 

இந்த நிலையில், ஜெயாவிற்கு மது அருந்தும் பழக்கம் ஏற்பட்டு தினமும் குடித்துவிட்டு குடும்பத்தில் உள்ளவர்களிடம் ரகளையில் ஈடுபட்டு வந்துள்ளார். இதற்கிடையே ஜெயா கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மது போதையில் பிரச்சினையில் ஈடுபட்டுள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த அவரது மகன், மகள் மற்றும் மருமகன் ராஜூ உள்ளிட்டோர் சேர்ந்து ஜெயாவின் கழுத்தைத் துண்டால் இறுக்கியுள்ளனர். இதில் ஜெயா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஜெயாவின் மகன் வேல்முருகன் மண்டபம் கிராம நிர்வாக அலுவலர் ராஜேஸ்வரியிடம் நடந்த விவரங்களை தெரிவித்துள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ராஜேஸ்வரி சம்பவம் குறித்து பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் படி போலீஸார் விரைந்து வந்து ஜெயாவின் மகன், மகள், மற்றும் மருமகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three peoples arrested for kill mother in ramanathapuram


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->