திருவாரூர் | பெற்றோருடன் ஆற்றில் குளிக்க சென்ற சிறுமி பலி! - Seithipunal
Seithipunal


நீடாமங்கலம் அருகே பெற்றோருடன் ஆற்றில் குளிக்க சென்ற போது ஆற்றில் மூழ்கி சிறுமி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது:

திருவாரூர்: நீடாமங்கலம் அருகே பொதக்குடி பகுதியை சேர்ந்தவர் முகமது சுலைமான். இவரது மகள் சுகைரா (வயது4). முகமதுசுலைமான் நேற்று மதியம் மகளை அழைத்து கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் நீடாமங்கலம் அருகே தண்டாலம் பாலம் வடக்கு பகுதியில் உள்ள கோரையாற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். 

பின்னர் முகமதுசுலைமான் ஆற்றில் குளிக்க சென்ற போது கரையில் அமர்ந்து இருந்த சுகைராவும் ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது ஆற்றில் தண்ணீர் அதிகமாக சென்றதால் சுகைரா மூழ்கி ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். 

இது குறித்து உடனடியாக அக்கம்பக்கத்தினர் தேவங்குடி காவலருக்கு தகவல் கொடுத்ததில் தேவங்குடி போலீசார் மற்றும் கூத்தாநல்லூர் தீயணைப்புத்துறை அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆற்றில் இறங்கி சிறுமியை தேடினர். 

அப்போது ஆற்றில் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் கோரையாறு தலைப்பில் உள்ள அணையை அடைத்து, மூழ்கிய நிலையில் சுகைரா உடல் மீட்கப்பட்டது.

பின்னர் அவரின் உடலை மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும், இந்த சம்பவம் குறித்து தேவங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆற்றில் மூழ்கி சிறுமி பலியான சம்பவம் அப்பகுதியை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

thiruvarur parents river drowned girl die


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->