#BREAKING || சைக்கிள் வழங்கும் விழாவில் மயங்கி விழுந்த பள்ளி மாணவி உயிரிழப்பு! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வரும் மாணவி அஞ்சலை அப்பள்ளியில் நடைபெற்ற இலவச சைக்கிள் வழங்கும் விழாவில் 3 மணி நேரமாக அமர்ந்திருந்துள்ளார். இந்த நிலையில் மாணவி அஞ்சலை திடீரென மயங்கி விழுந்ததால் அதே பள்ளியில் படிக்கும் அவருடைய அக்காவுக்கு தகவல் கொடுக்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் மாணவி அஞ்சலையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த மாணவிக்கு ஏற்கனவே உடல் நலக்குறைவு காரணமாக மயக்கம் ஏற்பட்டுள்ளது எனவும், இந்த நிலையில் தான் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் மாணவி அஞ்சலை அமர வைக்கப்பட்ட நிலையில் இன்று மீண்டும் மயங்கி விழுந்து மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். 

அரசு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சிக்காக உடனக்குறைவால் பாதிக்கப்பட்ட மாணவி அஞ்சலையை 3 மணி நேரம் வெயிலில் அமர வைக்கப்பட்டதால் மயங்கி விழுந்து உயிரிழந்ததாக பெற்றோர்களும் உறவினர்களும் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை மாவட்ட குழந்தை நல அலுவலர் பள்ளிக்குச் சென்று நேரில் விசாரணை தொடங்கியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruvannamalai schoolgirl fainted and died at a govt function


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->