திருப்பூர்: தமிழகத்தில் நுழைந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 26 பேர் கைது! சிக்கிய போலி ஆதார் அட்டை! - Seithipunal
Seithipunal



திருப்பூரில் உள்ள ஒரு தனியார் பனியன் நிறுவனத்தில் போலி ஆதார் அட்டைகள் மூலம் வேலை செய்து வந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 26 பேர் வியாழக்கிழமை பல்லடம் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

திருப்பூர், பல்லடம், அவிநாசி உள்ளிட்ட பகுதிகள் நூல் மற்றும் துணி தொழிற்சாலைகளுக்கு பெயர் பெற்றவை. இங்கு தமிழகத்திலும் வெளிமாநிலங்களிலும் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் வேலைக்குவருகின்றனர்.

இந்த நிலையில், வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் போலி ஆதார் கார்டுகள் மூலம் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து பனியன் தொழிற்சாலைகளில் வேலை செய்கிறார்கள் என்ற தகவல் உளவுத்துறைக்கு கிடைத்தது. அதன் அடிப்படையில், பல்லடம் அருகே டி.கே.டி மில் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள ஒரு தொழிற்சாலையில் போலீசார் சோதனை நடத்தினர்.

அப்போது, 26 வங்கதேசத்தவர்கள் போலி ஆதார் மூலம் வேலைக்கு சேர்ந்து இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டு, பல்லடம் காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இதுபோல் பலர் கைது செய்யப்படலாம் எனத் தெரிகிறது.

இது தொடர்பாக தொழில் துறை ஒருங்கிணைப்பாளர் ஒருவர் கூறியதாவது: “இங்குள்ள நிறுவனங்களுக்கு தொழிலாளர்கள் குறைவாக உள்ளதால் வட மாநிலங்களில் இருந்து முகவர்கள் மூலம் ஆட்களை கொண்டு வருகிறோம். அவர்களிடம் ஆதார் நகல் மட்டுமே பெறுகிறோம். ஆனால் அது உண்மையானதா என சரிபார்க்க இயலவில்லை. இது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

thiruppur Bangladesh people arrested


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->