அமராவதி ஆற்றங்கரை மக்களே உஷார்! விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை!
Thiruppur Amravathi river Flood warning
திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணைக்கு நீர்வரத்து வேகமாக அதிகரித்துள்ளதால், அணையிலிருந்து எப்போது வேண்டுமானாலும் உபரிநீர் திறக்கப்படலாம்.
இதையடுத்து, ஆற்றங்கரையோரம் வசிக்கும் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், அணையின் நீர்மட்டம் 90 அடியில் 85 அடியை எட்டியுள்ளது.
பாதுகாப்பு காரணமாக அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் வெளியேற்ற வாய்ப்பு உள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
English Summary
Thiruppur Amravathi river Flood warning