தருமபுரி || கிணற்றில் விழுந்து 12 வயது சிறுவன் பலி.! - Seithipunal
Seithipunal


தருமபுரி || கிணற்றில் விழுந்து 12 வயது சிறுவன் பலி.!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொம்மிடி அருகே காணிக்காரன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் கனகராஜ். விவசாயியான இவருடைய இளைய மகன் மணிகண்டன். இவர் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்தார். 

அதனால், மணிகண்டனின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் அவரை பராமரித்து வந்தனர். இந்த நிலையில் மணிகண்டன் விவசாய தோட்டத்திற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது மணிகண்டன் எதிர்பாராதவிதமாக அந்த பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் தவறி விழுந்துள்ளார். 

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக மணிகண்டனை மீட்டு பொம்மிடி பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிசிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது மணிகண்டன் ஏற்கனவே இறந்திருப்பது தெரியவந்தது. இதைக்கேட்டு அவரது பெற்றோர்கள் கதறி அழுதுள்ளனர். இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thirteen years old boy died fell down well in dharmapuri


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->