வேலூர்: தொடர்ந்து மூன்றாவது முறையாக லேசான நில அதிர்வு..! - Seithipunal
Seithipunal


தொடர்ந்து மூன்றாவது முறையாக நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

வேலூரில் கடந்த 23ம் தேதி அன்று பிற்பகல் 3 மணி அளவில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இந்த அதிர்வு ரிக்டர் அளவு கோலில் 3.2 ஆக பதிவாகியுள்ளது. அதேபோல கடந்த 29ம் தேதியும் வேலூரில் நில அதிர்வு ஏற்பட்டது.

இந்நிலையில், இன்று காலை 9: 30 மணி அளவில் ஐந்து நிமிட இடைவெளியில் இரண்டு முறை லேசான நில அதிர்வு ஏற்பட்டது . இதனால், அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனை அடுத்து, நில அதிர்வுக்கு காரணம் என்ன என்பது குறித்து ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Third earthquake in Vellore


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->