தேவர் ஜெயந்தி விழாவில் மின்சாரம் தாக்கி தூக்கியடிக்கப்பட்டு துடிதுடித்து இறந்த இளைஞர்.!  - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டத்தின் கோவிந்தாபேரியில் வடக்கு தெருவில் சுப்ரமணியன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு 18 வயதான முத்துக்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அம்பாசமுத்திரத்தில் இருக்கும் அரசு கலைக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு இளங்கலை பட்டம் படித்து வந்துள்ளார். 

இன்று அக்டோபர் 30 தேவர் ஜெயந்தி உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதை அப்பகுதி மக்கள் கோலாகலமாக கொண்டாட முடிவெடுத்து நேற்று இரவு அங்கு இருக்கும் கொடி கம்பத்தில் பெயிண்ட் அடித்து நடும் பணியில் ஈடுபட்டனர். 

அப்போது அங்கிருந்த மின்சார கம்பியானது கொடிக்கம்பத்தின் மீது உரசி உள்ளது. சரியாக அதே நேரத்தில் முத்துக்குமார் கொடிக்கம்பத்தில் ஏற முயற்சித்துள்ளார். இதனால் மின்சாரம் பாய்ந்து தூக்கி அடிக்கப்பட்ட முத்துக்குமார் சம்பவ இடத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். 

அது குறித்து போலீசார் தகவல் அறிந்து விரைந்து சென்று முத்துக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

thenkasi youngmen death in devar jayanthi festival


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->