சீனாவில் பயங்கரம்: ரசாயன ஆலை வெடி விபத்தில் 05 பேர் பலி,17 படுகாயம்: 6 பேர் மாயம்..! - Seithipunal
Seithipunal


கிழக்கு சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் ரசாயன ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 05 பேர் உயிரிழந்துள்ளதோடு, 06 பேர் மாயமாகியுள்ளனர். 

சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு, மீட்புக்குழுவினர் பற்றி எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் மாயமான 06 பேரை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.

இந்த வெடி விபத்தில் 17 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதிலும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த வெடி விபத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்ற நிலையில், இந்த தொழிற்சாலையில் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

5 killed 6 missing in chemical plant explosion in China


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->