தேனி | காதலி முன் உயிரிழந்த வாலிபர்! தொடர் விசாரணையில் போலீசார்! - Seithipunal
Seithipunal


தேனி, சின்னமனூர் அருகே உள்ள மார்க்கையன்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன் குமார் (வயது 29) இவர் தனியார் செல்போன் கடை ஒன்றில் பணியாற்றி வந்தார். 

இவருடன் கோம்பையை சேர்ந்த அன்னபூரணி (வயது 18) என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இருவரும் காதலித்து வந்துள்ளதாக தெரிகிறது. தினமும் ஜெகன் குமார் அன்னபூரணியை மாலை பணி முடிந்ததும் வீட்டில் இறக்கிவிட்டு மீண்டும் காலையில் வேலைக்கு அழைத்து வருவது வழக்கம். 

அதன்படி நேற்று இரவு இருவரும் பணி முடித்து விட்டு இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது உத்தமபாளையம் சாலையில் எதிரியை நோக்கி வந்த அரசு பேருந்து மீது ஜெகன் குமார் இருசக்கர வாகனம் மோதியது. 

இந்த விபத்தில் ஜெகன் குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். அன்னபூரணி படுகாயத்துடன் உயிருக்கு போராடிய நிலையில் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை விட்டு சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு அவரை பரிசோதனை மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக அன்னபூரணியை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சின்னமனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Theni teenager accident died Police inquiry


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->