முதல் மனைவியுடன் சென்ற கணவன்..!! கணவனை மீட்டு தரகோரி இரண்டாம் மனைவி தர்ணா..!!
The second wife was involved in Tarna
கணவனின் முதல் மனைவி வீட்டின் முன் இளம்பெண் தர்ணாவில் ஈடுப்பட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர், காமராஜர் பகுதியை சேர்ந்தவர் இளங்கோ. இவருக்கு திருமணமாகி மனைவியும் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில், இவர் தனக்கு திருமணமானதை மறைத்து கௌசல்யா என்பவரை திருமணம் செய்துள்ளார்.
இதனை அடுத்து, கௌசல்யாவிற்கு சமீபத்தில் தெரியவரவே அவர் மகளிர் காவல்நிலையத்தில் சென்று புகார் அளித்துள்ளார். இது குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் இரண்டாவது மனைவிக்கு குழந்தை இருப்பதால் அவரை கைவிடகூடாது எனவும் தெரிவித்தனர்.

ஆனால், முதல் மனைவி வீட்டிற்கு சென்ற இளங்கோ இரண்டாம் மனைவி வீட்டிற்கும் வரவில்லை அவருக்கு பொருளாதார உதவியும் செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால் கௌசல்யா இளங்கோவின் முதல் மனைவி வீட்டின் முன் தர்ணாவில் ஈடுப்பட்டுள்ளார்.
இதனை அடுத்து, அங்கு வந்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். தனது கணவரை மீட்டு தரகோரி கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார். உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்ததை அடுத்து அவர் அங்கிருந்து சென்றார். இதனால் அந்த பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
English Summary
The second wife was involved in Tarna