மகளிர் உதவித்தொகை வழங்க வரிகளை உயர்த்த கூடாது.. எதிர்க்கட்சி தலைவர் கோரிக்கை!
The opposition leader demands that the lines for the women's assistance scheme should not be raised
மகளிர் உதவித்தொகை வழங்க வரிகளை உயர்த்தாமல், ஒன்றிய அரசிடம் நிதியை பெற்று வழங்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் இரா. சிவா முதல்வர் ரங்கசாமிக்கு கோரிக்கைவிடுத்துள்ளார்.
புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும், சட்டமன்ற எதர்க் கட்சி தலைவருமான இரா. சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
2026 தேர்தலில் பெண்களின் ஓட்டுக்களை பெற்று முதல்வர் நாற்காலியில் தொடர்ந்து அமர்ந்துவிட வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக டெல்லியை பின்பற்றி புதுச்சேரியிலும் பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.2,500 வழங்கப்படும் என்று கடந்த பட்ஜெட்டில் முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.
அப்போது என்.ஆர். காங்கிரசை முழுமையாக விழுங்க நினைக்கும் ஒன்றிய ய பாஜக அரசு இவர் அறிவித்தவுடன் ஓடோடி வந்து நிதியுதவி வழங்கும் என்று நினைத்தார். ஆனால் பாஜகவோ ரங்கசாமி பெயர் கெட்டுப் போகட்டும் என்று நிதி ஏதும் தராமல் உள்ளது. புதுச்சேரி மாநில பாஜக தலைவர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் அறிவிப்புக்கும், தங்களுக்கும் சம்பந்தமே இல்லை என்பதைப்போல் வலம் வந்து கொண்டுள்ளனர்.
பாஜகவிற்கு மக்களைப்பற்றி எப்போதுமே சிந்தனை கிடையாது. மக்களிடம் ஜாதி, மொழி, இனம் உள்ளிட்ட எந்தவகையிலாவது பிளவு ஏற்படுத்தி அதிகாரத்திற்கு வரவேண்டும் என்பது மட்டுமே அவர்களது இலக்கு. ஒடிசா தேர்தலில் தமிழனை திருடன் என்று கூறி வாக்கு பெற்றார்கள். தமிழக தேர்தல் என்றால் தமிழ்தான் மூத்த மொழி என்பார்கள், தமிழ் வளர்ச்சிக்கும், தமிழர்கள் வளர்ச்சிக்கும் நிதியுதவி தரமாட்டார்கள்.
இதுபோன்ற பாஜகவின் உண்மையான முகத்தை தெரிந்து கொள்ளாமலும், புதுச்சேரி நிதி நிலையை அறிந்து கொள்ளாமலும், அண்டை மாநிலங்களில் நிலையை உணராமலும் புதுச்சேரியிலும் பெண்களுக்கு ரூ.2500 நிதி வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். தற்போது ஒன்றிய அரசு நிதி ஏதும் தராததால் மதுபான வரி உயர்வு, நில வழிகாட்டி மதிப்பு உயர்வு என்று மக்களிடமே தான் அறிவித்த திட்டங்களை செயல்படுத்த முதல்வர் ரங்கசாமி பணம் பறிக்கத் தொடங்கியுள்ளார்.
கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் நில வழிகாட்டி மதிப்பு உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பெண்களுக்கான மாதாந்திர நிதியுதவி ரூ.2500 மற்றும் மஞ்சள் கார்டு தலைவிகளுக்கு ரூ.ஆயிரம், முதியோர், விதவை, மாற்றுத்திறனாளிகளின் உதவி தொகைகளில் ரூ.500 உயர்வு ஆகியவைகளை எவ்வாறு செயல்படுத்தலாம் என்பது குறித்து மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களை அறிய உடனடியாக முதல்வர் ரங்கசாமி சட்டசபையை கூட்ட வேண்டும். சட்டசபையில் விவாதித்தே அரசு வருமானத்தை உயர்த்த வேண்டும். வரியில்லா பட்ஜெட் தாக்கல் செய்த பின்னர் வரிகளை உயர்த்தும் மக்கள் விரோத, சட்டமன்ற விரோத, ஜனநாயக விரோத போக்கை முதல்வர் ரங்கசாமி கைவிட வேண்டும்.
குடும்ப தலைவிகளுக்கான மகளிர் உதவித்தொகையை இந்தியாவிலேயே அறிவித்து முதலில் செயல்படுத்தியவர் மாண்புமிகு தமிழக முதல்வர், தளபதியார் மு.க.ஸ்டாலின் அவர்கள்தான். எனவே குடும்ப தலைவிகளுக்கான உதவித்தொகையை உயர்த்தி வழங்குவதை வரவேற்கிறோம். அதேசமயம் அதற்காக மக்களிடம் இருந்து பறித்தே மக்களிடம் வழங்குவதை கண்டிக்கிறோம். விரியை உயர்த்தாமல் ஒன்றிய ய அரசிடம் இருந்து நிதியை பெற்று மகளிர் உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். முன்னதாக ஏற்கனவே மகளிர் உதவித்தொகை விடுபட்டுள்ள அனைவருக்கும் வழங்க வேண்டும். அதுபோல் விண்ணப்பித்து கிடைக்காமல் உள்ள முதியோர், மாற்றுத் திறனாளிகள், மீனவர்கள் உள்ளிட்ட தகுதியான பயனாளிகள் அனைவருக்குமான உதவித்தொகையை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
English Summary
The opposition leader demands that the lines for the women's assistance scheme should not be raised