இருப்பு கிடங்கு உரிமையாளர்கள் நாளை இடை கடவுச்சீட்டு பெற்றுக் கொள்ளலாம்..மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!  - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்ற இருப்பு கிடங்கு உரிமையாளர்கள் இணையவழி மூலம் இடை கடவுச்சீட்டு பெற்றுக் கொள்ளலாம்  என்று  மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் தெரிவித்துள்ளார்.

 திருவள்ளூர் மாவட்டத்தில் 2011-ஆம் ஆண்டு தமிழ்நாடு கனிமங்கள் சட்ட விரோதமாக தோண்டியெடுத்தல், கொண்டு செல்லுதல் மற்றும் இருப்பகத்தில் வைத்தல் தடுப்பு மற்றும் கனிம வணிகர்கள் விதிகளின்படி, சிறுவகை கனிமங்களான சாதாரண கற்கள், ஜல்லி, செயற்கை மணல் (எம்.சாண்ட்) மற்றும் பிறவகை கனிமங்களை இருப்பு கிடங்கு அமைத்து வாகனங்கள் மூலம் வெளியில் கொண்டு செல்ல, மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்ற இருப்பு கிடங்கு உரிமையாளர்களுக்கு இதுநாள் வரையில் திருவள்ளூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலகத்தின் மூலம் சம்மந்தப்பட்ட இருப்பு கிடங்கு உரிமையாளர்களுக்கு நேரடியாக இடை கடவு சீட்டு வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், இருப்பு கிடங்குகளிலிருந்து வாகனங்களில் ஏற்றிச் செல்லப்படும் அனைத்து கனிமங்களும் முழுமையாக கண்காணிக்கப்பட்டு கனிம விற்பனை எளிதாகவும், வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற. தமிழக அரசின் வழிகாட்டுதல்களின்படி, இருப்பு கிடங்குகளிலிருந்து கனிமங்களை கொண்டு செல்ல. திருவள்ளூர் மாவட்டத்தில் 14.06.2025 முதல் http://mimas.tn.gov.in என்ற இணைதளத்தின் மூலமாக சமர்ப்பிக்கப்படும் நடைச்சீட்டுக்களின் அடிப்படையில், இடைகடவு சீட்டு வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளதால், மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்ற இருப்பு கிடங்கு உரிமையாளர்கள் இணையவழி முறையை பயன்படுத்தி இடைகடவு சீட்டு பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The landowners of the land will be able to obtain a temporary permit tomorrow District Collectors announcement


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->