அழகாக இல்லை' என திட்டிய கணவர்..மனைவி செய்த அதிர்ச்சி சம்பவம்! - Seithipunal
Seithipunal


நீ அழகாக இல்லை, அசிங்கமாக இருக்கிறாய் என கூறி  அடித்து துன்புறுத்திய கணவனை மனைவி பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 கிருஷ்ணகிரி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியான ரங்கசாமியை அவருடைய மனைவி கடந்த 9-ந் தேதி இரவு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.இதில் படுகாயம் அடைந்த கணவர் ரங்கசாமி கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு  சிகிச்சை பலனின்றி 11-ந் தேதி இறந்தார்.இதையடுத்து  இந்த கொலை சம்பவம் தொடர்பாக காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருப்பதியில் பதுங்கி இருந்த மனைவி கவிதாவை நேற்று கைது செய்தனர். 

அப்போது போலீசார் நடத்திய விசாரணையில் கைதான கவிதா போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.அதில் அவர் கூறுகையில்,  திருமணமாகி 22 ஆண்டுகள் ஆகி நாங்கள் சொத்து, பணம், நகைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தோம். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு எனது கணவர் வேலைக்கு சென்ற இடத்தில் காரிமங்கலத்தை சேர்ந்த மஞ்சுளாவுடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதை அறிந்த நான் எனது கணவரை கண்டித்தும் அவர் மஞ்சுளாவுடன் பழகுவதை நிறுத்தவில்லை. மேலும் வீட்டில் இருந்த 80 பவுன் நகை நிலம் ஆகியவற்றை  விற்று அவரிடம் கொடுத்தார். சொந்த வீட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்த நாங்கள் தற்போது வாடகை வீட்டில் வசிக்கிறோம்.

ஒரு கட்டத்தில் எனது கணவர் வீட்டிற்கும் ஒழுங்காக வருவதில்லை. 3 மாதத்திற்கு ஒரு முறை வருவார். என்னிடம் ஆபாசமாக பேசுவதுடன், நீ அழகாக இல்லை, அசிங்கமாக இருக்கிறாய் என்றெல்லாம் கூறி என்னை அடித்து துன்புறுத்துவார். 

இந்த நிலையில் 9-ந் தேதி இரவும் குடித்துவிட்டு வீட்டிற்கு மாடிக்கு சென்ற அவர் என்னை அடித்து உதைத்துவிட்டு பின்னர் அவர்  தூங்கி விட்டார். அப்போது கோபத்தில் இருந்த நான் விவசாய நிலத்தில் மருந்துக்கு தெளிக்க வைத்திருந்த பெட்ரோலை  பெட்ஷீட்டில் ஊற்றி எடுத்து தீயை கொளுத்தி அவர் மீது போட்டுவிட்டு  தப்பிஓடி தலைமறைவான என்னை போலீசார் மடக்கி பிடித்து விட்டனர்" என்று அவர் வாக்குமூலத்தில் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The husband who criticized saying not beautiful the shocking event that the wife did


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?


செய்திகள்



Seithipunal
--> -->