நடத்தையில் சந்தேகம்: கொடூரமாக மனைவியை குத்தி கொன்ற கணவர்... கள்ளக்குறிசியில் பரபரப்பு...!
The husband brutally murder his wife in kallakurichi
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கணவர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் பல்லக்கச்சேரி பகுதியை சேர்ந்தவர் முருகன் (25). இவருக்கு கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு வன்னஞ்சூர் பகுதியை சேர்ந்த விஜயா(20) என்பவருடன் திருமணம் நடந்தது. ஆனால் திருமணமான மூன்று மாதங்களில் இவர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விஜயா தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
இதையடுத்து பலமுறை முருகன், விஜயாவை வீட்டிற்கு அழைத்தும் அவர் வரவில்லை. இந்நிலையில் விஜயாவிற்கும், கடலூர் மாவட்டம் சிறுபாக்கம் பகுதியை சேர்ந்த வேறு ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை முருகன் கண்டித்து, மீண்டும் வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார்.
இதனால் இவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், நேற்று கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் முருகன் விஜயாவை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே விஜயா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்ற முருகனை பொதுமக்கள் மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அப்பொழுது எதிர்பாராத விதமாக இன்ஸ்பெக்டரையும் முருகன் கத்தியால் குத்தியுள்ளார்.
இதைத்தொடர்ந்து முருகனை கைது செய்த போலீசார், விசாரணை நடத்தியதில் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து கொலை செய்ததாக முருகன் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார், முருகனை சிறையில் அடைத்தனர்.
English Summary
The husband brutally murder his wife in kallakurichi