5 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு.! தந்தைக்கு வாழ்நாள் சிறை தண்டனை.! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தில் ஐந்து வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தைக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியை சேர்ந்தவர் 49 வயது கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2021ஆம் ஆண்டு அவரது ஐந்து வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து சாத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு கூலித்தொழிலாளியை கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஐந்து வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தைக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூபாய் 10 லட்சம் வழங்க பரிந்துரை செய்து உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The father who sexually harassing his five year old daughter was jailed for life in virudhunagar


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->