மின்கட்டண வசூல் மையத்தை மீண்டும் செயல்பட்டுக்கு கொண்டு வர வேண்டும்!
The electricity collection center must be operational again
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரின்நேர்முகு உதவியாளார் திரு. மகாராஜ் அவர்களிடம் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத்தலைவர் ஈ.பி.அ.சரவணன் நேரிடையாக மனு அளித்துள்ளார்.
அதில் சர்க்கார் பெரியபாளையம் ஊராட்சியில் செயல்பட்டு வந்த மின்கட்டண வசூல் மையத்தை திடீரென மூடப்பட்டு தற்போது 10 கிலோ மீட்டர் தலையிலுள்ள ஊத்துக்குளிக்கு மின் கட்டணத்தை முதியவர்கள், பெண்கள் உள்ளிட்ட நுகர்வோர்கள் செல்லும் அவல நிலையை ரத்து செய்து மீண்டும் வழக்கம் போல் சர்க்கார் பெரியபாளையம் ஊராட்சியில் மின் கட்டண வசூல் மையம் முழுமையாக செயல்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி கோட்டத்திலுள்ள சர்க்கார் பெரியபாளையம் ஊராட்சியில் 4ஆயிரம் குடும்பங்கள், ஆயிரத்துக்கு மேற்பட்ட தொழிற்சாலைகள் என 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் சர்க்கார் பெரியபாளையம் மின்வாரிய பிரிவு அலுவலகத்திற்குட்பட்ட பகுதியிலுள்ள அக்ரஹார பெரியபாளையம், சர்க்கார் பெரியபாளையம், கூலிப்பாளையம், நஞ்சராயன் குளம், உள்ளிட்ட இடங்களில் 4600 மின் இணைப்புகளில் உள்ளன.
சர்க்கார் பெரியபாளையம் ஊராட்சியிலுள்ள கிராமங்களுக்கும் மின் உபயோக கட்டணத்தை சர்க்கார் பெரியபாளையம் உதவி பொறியாளர் அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டர் சூல் மையத்தில் மின்கட்டணம் செலுத்தி வந்தனர் தற்போது திடீரென சர்க்கார் பெரியபாளையம் உதவி பொறியாளர் அலுவலகத்திலிருந்த மின் கட்டண வசூல் மைத்தை முற்றிலுமாக மூடப்பட்டு 10.கிலோ மீட்டர் தூரத்திலுள்ள ஊத்துக்குளி மின்வாரிய அலுவலகத்திலுள்ள மின்கட்டண வசூல் மையத்தில் இனி மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளதால் போதுமான போக்குவரத்து வசதியின்றி, 10 கிலோ மீட்டர் தூரம் சென்று முதியவர்கள், பெண்கள் மின்கட்டணம் செலுத்துவது என்பது மிகவும் கடினமாகும்.
எனவே எவ்வித முன்னறிவிப்பு இன்றி மூடப்பட்ட சர்க்கார் பெரியபாளையம் மின்வாரிய அலுவலகத்திலுள்ள மின்கட்டண வசூல் மையத்தை உடனடியாக முழுமையாக மீண்டும் திறந்து சர்க்கார் பெரியபாளையம் பகுதியிலேயே தொடர்ச்சியாக மின் கட்டணத்தை முதியவர்கள், பெண்கள் உள்ளிட்ட நுகர்வோர்கள் கட்டணம் செலுத்துவதை உறுதிசெய்ய வேண்டுமென திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
English Summary
The electricity collection center must be operational again