குடிநீர் வீணாய் சாலையில் போகும் அவலம்..கண்டுகொள்ளுமா மாநகராட்சி நிர்வாகம்?
The disaster of drinking water going waste on the roads Will the municipality administration notice it?
திருப்பூர் ஊத்துக்குளி மெயின் ரோடு இரண்டாவது ரயில்வேகேட் அருகே குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு சாலை முழுவதும் ஆறு போல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குழாய் உடைப்பை சீர் செய்ய பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
திருப்பூர் ஊத்துக்குளி மெயின் ரோடு இரண்டாவது ரயில்வேகேட் அருகே கடந்த மூன்று தினங்களாக குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு சாலை முழுவதும் ஆறு போல் தண்ணீர் பெருக்கெடுத்து பெரும் பள்ளம் ஏற்பட்டுவிட்டது.
இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளானார்கள். இதில் இரு சக்கர வாகனங்களில் பெண்களும் அதிகமாக பள்ளிக் குழந்தைகளுடன் பயணித்து செல்வதால் எங்கே நிலை தடுமாறி கீழே விழுந்து விடுவமோ என்று பீதியுடன் பயணிப்பதால் பின் தொடர்ந்து வரும் வாகனங்களை கவனிக்காமல் ஒதுங்கி செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது.
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. என்று பொதுமக்கள் கேள்வி? அதேபோல் ஊத்துக்குளி சாலை ஒத்தக்கண் பாலம் தனலட்சுமில் அறுகிலும் இதே போல் பல மாதங்களாக குடிநீர் குழாய் உடைந்து பொதுமக்கள் பயனின்றி குடிநீர் வீண் விரையமாய் சாலை முழுவதும் ஆறு போல் ஓடுகிறது.
ஆகையால் பொதுமக்கள் உயிரை காவு வாங்கும் முன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கூடிய விரைவில் குழாய் உடைப்பு பணிகள் பழுது பார்த்து சாலையை சீரமைத்து விட்டால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் அச்சமின்றி பயணிக்கலாம். இது போன்ற விபத்துகளை தடுக்குமா மாநகராட்சி நிர்வாக அதிகாரிகள் கண்டு கொள்வார்களா ?
English Summary
The disaster of drinking water going waste on the roads Will the municipality administration notice it?