ஏரியில் மீன் பிடிக்க சென்ற சிறுவர்களுக்கு நிகழ்ந்த சோகம்.. நீரில் மூழ்கி பரிதாப பலி..! - Seithipunal
Seithipunal


மீன் பிடிக்க சென்ற சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் ஆலங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன். இவரது மகன் மோகனராமன் (10) தனது நண்பனாக தாஸ் உடன் அங்குள்ள ஏரியில் மீன் பிடிக்க சென்றுள்ளார். எதிர்பாராதவிதமாக இருவரும் தண்ணீரில் விழுந்துள்ளனர்.

இதனையடுத்து மகன்களை காணாததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தனர். அப்போது ஏரியில் அவர்கள் சடலமாக கிடந்தது தெரியவந்தது. தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இரண்டு சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The boys who went fishing in the lake drowned and died miserably


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->