மாங்காய் பறிக்க சென்ற சிறுவன்... அடுத்த நொடியே நேர்ந்த சோகம்..! விருதுநகரில் அதிர்ச்சி...! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தில் மாங்காய் பறிக்க சென்ற சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அயன்கரிசல்குளம் பகுதியை சேர்ந்தவர் மாரிசாமி. இவரது மகன் சூர்யா(6). இவன் அதே பகுதியில் உள்ள பாட்டியுடன் வெளியே சென்றுள்ளான். அப்பொழுது கிணறு அருகே உள்ள மாமரத்தில் மாங்காய் பறிப்பதற்காக சூர்யா சென்றுள்ளான். ஆனால் மாங்காய் பறிக்க முயன்ற சூர்யா எதிர்ப்பாராத விதமாக திடீரென கிணற்றில் தவறி விழுந்துள்ளான்.

இதைத்தொடர்ந்து சூர்யாவை காணவில்லை என்று பாட்டி கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து பாட்டியின் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், கிணற்றில் விழுந்த சூர்யாவை பிணமாக மீட்டனர். இதையறிந்த குடும்பத்தினரும், உறவினர்களும் சூர்யாவின் உடலைப் பார்த்து கதறி அழுதனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் சூர்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The boy fell into the well and died in virudhunagar


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->