வீட்டின் அருகே விளையாடிய சிறுவன்... கிணற்றில் பிணமாக மீட்பு...! சேலத்தில் பரபரப்பு...! - Seithipunal
Seithipunal


வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் திருமலைகிரி அருகே சங்கரன் வட்டம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவரது மனைவி ரேவதி. இவர்களது குழந்தை கவினேஷ் (3). இந்நிலையில் கவினேஷ் நேற்று மதியம் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்துள்ளான். அப்பொழுது விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் அருகில் இருந்த பொது கிணற்றில் எதிர்பாராதவிதமாக திடீரென தவறி விழுந்துள்ளான். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக குழந்தையை மீட்க கிணற்றில் இறங்கினர்.

ஆனால் ஒரு மணி நேர தேர்தலுக்கு பிறகு கவினேஷ் பிணமாக மீட்கப்பட்டான். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், கவினேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பகுதியில் பெயரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The boy fell into the well and died in salem


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->