மாநில அந்தஸ்து கோரும் படிவத்தில் கையெழுத்து போட்ட அதிமுக மாநில செயலாளர்!  - Seithipunal
Seithipunal


புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வேண்டி  அதிமுக மாநில செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகமிடன்  கட்சி தலைமை அலுவலகத்தில் சந்தித்து பொதுநல அமைப்பு தலைவர்கள் சட்டமன்ற உறுப்பினர் நேரு தலைமையில் கையெழுத்து பெற்றனர்.

புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வேண்டி  உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நேரு  தலைமையில்  பொதுநல அமைப்பு தலைவர்களும் அதன் நிர்வாகிகளும் தொடர்ந்து பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக தலைநகர் புதுடெல்லி சென்று கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்தி புதுச்சேரியில் ஒரு லட்சம் மக்களிடம் கையொப்பம் பெற்று மத்திய அரசிடம் மனுவாக அளிக்க உள்ளனர். அதில் முதல் கையப்பத்தை புதுச்சேரி முதலமைச்சர் அவர்களிடம் பெற்றுள்ளனர். 

மேலும் அரசியல் கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு ஊழியர்கள் மாணவர்கள் பொதுமக்கள் என  அனைவரிடமும் கையெழுத்து பெற்று  வருகிறார்கள். இந்நிலையில்  அதிமுக மாநில செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகமிடன்  கட்சி தலைமை அலுவலகத்தில் சந்தித்து பொதுநல அமைப்பு தலைவர்கள் சட்டமன்ற உறுப்பினர் நேரு தலைமையில் மாநிலத் தகுதிக்கான கையெழுத்து இயக்கத்தில் மாநிலச் செயலாளர் அன்பழகன் மற்றும் கட்சி நிர்வாகிகளிடமும் கையப்பத்தை பெற்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The AIADMK state secretary signed the petition demanding state status


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->