வீட்டு முன்பு விளையாடிய 4 வயது சிறுமி... ராட்சத கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சோகம்..!
The 4 year girl died after falling into the well in Tiruppur
திருப்பூர் மாவட்டத்தில் வீட்டு முன்பு விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமி கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் நஞ்சப்பகவுண்டன் வலசு பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி தனலட்சுமி. இவர்களது மகள் தக்ஷனாஸ்ரீ(4). இந்நிலையில் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த தக்ஷனாஸ்ரீ திடீரென காணாமல் போனார். இதையடுத்து பெற்றோர், தக்ஷனாஸ்ரீயை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர் ஆனால் மகள் கிடைக்காததால் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் வீட்டிற்கு அருகே 30 அடி ஆழமுள்ள தண்ணீர் நிறைந்த விவசாய கிணற்றில் சிறுமி தவறி விழுந்து இருக்கலாம் என்று சந்தேகமடைந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் சிறுமையை தேடினர். இதையடுத்து சிறுமி கிணற்றில் இருந்து பிணமாக மீட்கப்பட்டார். இதைத்தொடர்ந்து சிறுமியின் உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
The 4 year girl died after falling into the well in Tiruppur