தென்காசி கடையத்தில், செங்கல்சூளை அதிபர் வெட்டி கொலை.. மகன் வெறிச்செயல்.! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையம் புலவனூர் பகுதியை சார்ந்தவர் தங்கராஜ் (வயது 66). இவர் செங்கல்சூளை அதிபராக இருந்து வருகிறார். இவருக்கு வள்ளியம்மாள், சுகந்தா என்ற இரண்டு மனைவிகளை உள்ளனர். முதல் மனைவியான வள்ளியம்மாளுக்கு திருக்குமரன் என்ற 42 வயது மகன் மற்றும் இராமகிருஷ்ணன் என்ற இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர். தங்கராஜ் தனது முதல் மனைவியை பிரிந்து, இரண்டாவது மனைவியுடன் வசித்து வந்துள்ளார். 

மேலும், மனைவிகளின் எதிர்காலத்தை கருதி, முதல் மனைவியின் பெயரில் 15 ஏக்கர் நிலமும், இரண்டாவது மனைவியின் பெயரில் 25 ஏக்கர் நிலமும் எழுதி வைத்துள்ளார். இந்த நிலையில், தங்கராஜ் தனது நிலம் வழியாக வள்ளியம்மாள் நிலத்திற்கு செல்ல கூடாது என பாதையில் முள் வேலி அமைத்துள்ளார். இந்த விஷயத்திற்கு திருக்குமரன் எதிர்ப்பு தெரிவிக்கவே, இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் தந்தையை மகன் அரிவாளால் வெட்டியதில் அவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த கடையம் காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து தங்கராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து திருகுமரனை கைது செய்தனர். திருகுமாரனிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tenkasi Kadayam Bricks Businessman Murder Police Investigation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->