சினிமா பார்க்க வந்த இடத்தில் இப்படியொரு அதிர்ச்சியா...? திரையரங்கிற்குள் அமைக்கப்பட்ட முள்வேலி...அலறிய விஜய் ரசிகர்கள்...!
Is this shock place where you came watch movie Barbed wire erected inside theater Screaming Vijay fans
‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் முதல் நாள் காட்சிக்காக அறந்தாங்கி திரையரங்கில் திரண்ட விஜய் ரசிகர்களுக்கு, எதிர்பாராத அதிர்ச்சி காத்திருந்தது. வழக்கமான ரசிகர் கொண்டாட்டங்களுக்கு மாறாக, திரைக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள் பலரின் கவனத்தையும் ஈர்த்ததுடன், அப்பகுதியில் பரபரப்பான பேசுபொருளாகவும் மாறியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள சுபா திரையரங்கில் ‘ஜனநாயகன்’ திரைப்படம் இன்று வெளியானது. முதல் நாள் காட்சியை காணவும், தங்களது அபிமான நடிகர் விஜய்யின் திரைப்பட வெளியீட்டை உற்சாகமாகக் கொண்டாடவும் ஏராளமான ரசிகர்கள் திரையரங்கில் குவிந்தனர்.
பொதுவாக, விஜய் திரைப்படங்களின் முதல் நாள் காட்சிகளில் ரசிகர்கள் திரைக்கு அருகே சென்று நடனமாடியும், முழக்கங்களை எழுப்பியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். ஆனால், இந்த முறை திரையின் முன்பகுதியில் வழக்கத்திற்கு மாறாக முள் வேலி போன்ற வலுவான தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன.
இதனால், திரைக்கு அருகே சென்று வழக்கமான முறையில் கொண்டாட்டத்தில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டதாக ரசிகர்கள் தெரிவித்தனர். திரைக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளைப் பார்த்த ரசிகர்கள் சிலர் அதிருப்தியும், ஆச்சரியமும் தெரிவித்தனர்.
ரசிகர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், திரையரங்கின் உபகரணங்கள் மற்றும் சொத்துகளுக்கு சேதம் ஏற்படாமல் தடுப்பதற்காகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
திரைப்பட வெளியீட்டு நாளில் அமைக்கப்பட்ட இந்தத் தடுப்புகள் தொடர்பான விவகாரம், அறந்தாங்கி பகுதி விஜய் ரசிகர்கள் மத்தியில் தற்போது பரவலாக விவாதிக்கப்படும் விஷயமாக மாறியுள்ளது.
English Summary
Is this shock place where you came watch movie Barbed wire erected inside theater Screaming Vijay fans