'சிக்மா' படத்தின் வெளியீட்டிற்காகக் அப்பா காத்திருக்கிறார்'; முதல்வர் விஜய் குறித்து மனம் திறந்த மகன் ஜேசன் சஞ்சய்..! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்தவர். அவரின் அரசியல் வருகைக்கு பின் சினிமாவில் இருந்து முழுவதுமாக ஒதிங்கியுள்ளார். ஆனால் அவரது மகன் ஜேசன் சஞ்சய் தற்போது திரைத்துறையில் இயக்குநராக தனது முதல் அடியை எடுத்து வைத்துள்ளார்.

டோலிவுட் நடிகர் சந்தீப் கிஷனை வைத்து 'சிக்மா' என்ற படத்தை இயக்கியுள்ளார். 'சிக்மா' திரைப்படம் கடந்த ஜூன் மாதமே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பல்வேறு காரணங்களால் படத்தின் வெளியீடு தொடர்ந்து தள்ளிப்போன நிலையில், தளபதியின் ரசிகர்களுக்கும், ஜேசன் சஞ்சய் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில், 'சிக்மா' திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் அக்டோபர் 02-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

இதையடுத்து படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன்படி, ஹைதராபாத்தில் நடைபெற்ற 'சிக்மா' படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் ஜேசன் சஞ்சயிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு தெளிவாக அவர் பதிலளித்துள்ளார். அதாவது ஜேசனிடம் ''திரைத்துறையில் பிரபலமாக இருப்பவர்கள், தங்களது பிள்ளைகளும் திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு விஷயங்களைச் செய்வார்கள். அவர்களுக்கு பண உதவி செய்வது, முன்னணி இயக்குநர்களிடம் சிபாரிசு செய்வது என பல வழிகளில் ஆதரவாக இருப்பார்கள். அந்த வகையில், உங்கள் தந்தை விஜய், உங்கள் முதல் படத்திற்காகவும், படத்தின் புரமோஷனுக்காகவும் ஏதாவது செய்தாரா?'' என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு ஜேசன் சஞ்சய், ''அப்பா எனக்காக நிறைய செய்திருக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக, உங்களை எனக்குத் தந்திருக்கிறார். ஆனால், பட புரமோஷன் சார்ந்த விஷயங்களில் அவர் தலையிடுவதை நான் விரும்பவில்லை. அதுமட்டுமல்லாமல், அவர் தற்போது முதல்வராகப் பதவி வகிக்கிறார். அவருக்கு நிறைய பொறுப்புகள் இருக்கின்றன. அவரும் 'சிக்மா' படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார்.'' என்று பதிலளித்துள்ளார்.

அத்துடன் அவரிடம், ''உங்கள் தந்தை முதல்வரானபோது நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள்?'' என்று க்ளெவி எழுப்பப்பட்டது. அதற்கு ''உங்களைப் போலவேதான். அப்பா முதல்வரானதில் எனக்கும், அவரைச் சுற்றியிருக்கும் அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது'' எனத் தெரிவித்துள்ளார்.

தனது அப்பா முதல்வர் விஜய் குறித்து மகன் ஜேசன் சஞ்சய் பேசிய இந்தப் பதில்கள் தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. குறிப்பாக, ''எல்லாவற்றுக்கும் மேலாக, உங்களை எனக்குத் தந்திருக்கிறார்'' என்று அவர் பதிலளித்துள்ளமை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Jason Sanjay spoke about his father CM Vijay mentioning that he is awaiting the release of the film Sigma


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->