தனியாக இருந்த 6 வயது சிறுமி... "கோவில் பூசாரி" செய்த காரியம்... நீதிமன்றம் விதித்த அதிரடி தண்டனை...! - Seithipunal
Seithipunal


தர்மபுரி மாவட்டத்தில் தனியாக இருந்த ஆறு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கோவில் பூசாரிக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கோவில் பூசாரி சுப்பிரமணி(67). இவர் தனியாக இருந்த 6 வயது சிறுமியை கடந்த 2019ஆம் ஆண்டு, மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையடுத்து சிறுமியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதால் பெற்றோர், சிறுமியிடம் விசாரித்துள்ளனர்.

அப்பொழுது சிறுமியை கோவில் பூசாரி சுப்பிரமணி பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சுப்பிரமணியை கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பான விசாரணை தர்மபுரி மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆறு வயது சிறுமியை பலாத்காரம் செய்த கோவில் பூசாரி சுப்பிரமணிக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 15 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Temple priest who raped 6 year old girl jailed for 13 years in dharmapuri


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->