சூனியம் எடுக்க பரிகார பூஜை: தொழிலதிபர் மனைவியிடம் 76 கிராம் தங்கம் பறிப்பு: கோயில் பூசாரி அதிரடி கைது..!
Temple priest arrested for defrauding businessmans wife of 76 grams of gold for atonement puja
கட்டுமான தொழிலதிபருக்கு தொழில் பார்ட்னர் ஒருவர் சூனியம் வைத்திருப்பதாக கூறி பரிகார பூஜை செய்து, 76 கிராம் தங்கம் நகைகள் மோசடி செய்துள்ள கோயில் பூசாரியை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை மந்தைவெளி ஸ்ரீ வேங்கடட்ம டிரஸ்ட் பாக்கம் பகுதியை சேர்ந்தவர் தொழிலதிபர் எஸ்.பி.ஆர்.ரமேஷ் (56). ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான தொழில் செய்து வருகிறார். கடந்த சில நாட்களாக ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான தொழில் சரியாக இல்லை என்று தனது நண்பர் ஒருவரிடம் கூறியுள்ளார்.

அப்போது அவருடைய நண்பர் பெரம்பூர் பெரியார் நகர் பகுதியில் உள்ள கோயில் பூசாரி பூர்ண பிரகாஷ் என்பவர் சொல்வது எல்லாம் நடப்பதாக கூறியுள்ளதோடு, தனது நண்பரை கோயில் பூசாரி பூர்ண பிரகாஷை நேரில் சந்தித்து பேச வைத்துள்ளார். அப்போது பூசாரி தான் அறநிலையத்துறையில் உறுப்பினராக உள்ளதாக கூறியுள்ளார்.
பின்னர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18-ஆம் தேதி கோயில் பூசாரி தொழிலதிபர் எஸ்.பி.ஆர்.ரமேஷ் வீட்டிற்கு பூஜை பொருட்களுடன் வந்து யாகம் செய்துள்ளார். எஸ்.பி.ஆர்.ரமேஷின் தொழில் பார்ட்னர் வளர்ச்சியை தடுக்கும் வகையில் ‘சூனியம்’ வைத்துள்ளார் என்றும், அதை பரிகார பூஜை மூலம் தான் அதை சரிசெய்ய வேண்டும். இல்லை என்றால் உங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று கூறி பயமுறுத்தியுள்ளார்.

உடனே தொழிலதிபரின் மனைவி 02 தங்க செயின் மற்றும் ஒரு வலையல் என மொத்தம் 76 கிராம் தங்க நகைகள் மற்றும் குடும்ப புகைப்படத்தை பூசாரி பூர்ண பிரகாஷிடம் பரிகார பூஜைக்காக கொடுத்துள்ளார். பரிகார பூஜை முடிந்து பிறகு பூஜைக்கு சொடுத்த 76 கிராம் தங்க நகைகளை திரும்ப கொடுக்காமல் பூசாரிஏமாற்றி வந்துள்ளார்.
10 மாதங்கள் நடத்தும் நகைகளை கொடுக்காததால், நேரடியாக தொழிலதிபர் சென்று பூசாரியிடம் கேட்டுள்ளார். அதற்கு பூசாரி உங்கள் குடும்பத்தின் மீது ‘சூனியம்’ வைத்து உங்களை தொழிலை முடக்கி விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

நகையை இழந்த ஏமாற்றத்தில் எஸ்.பி.ஆர்.ரமேஷ் அபிராமபுரம் காவல் நிலையத்தில் பூசாரி மீது புகார் அளித்துள்ளார். புகாரின் படி போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் பூசாரி அறநிலையத்துறையில் உறுப்பினராக இருப்பதாக பொய் சொல்லி தொழிலதிபரை நம்ப வைத்ததும் தெரியவந்துள்ளது. பின்னர் சூனியம் எடுப்பதாக 76 கிராம் நகைகளை மோசடி செய்ததும் உறுதியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து, போலீசார் நேற்று கோயில் பூசாரியான பூர்ணபிரகாஷை கைது செய்துள்ளதோடு, அவரிடம் இருந்து தொழிலதிபர் மனைவியிடம் பெற்ற 76 கிராம் தங்க நகைகளை மீட்டுள்ளனர்.
English Summary
Temple priest arrested for defrauding businessmans wife of 76 grams of gold for atonement puja