பசும்பொன்னில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் மாரடைப்பால் உயிரிழப்பு..! - துயரம் சூழ்ந்த காவல்துறை!
female police officer on security duty in Pasumpon died of a heart attack Police in mourning
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் நாளை நடைபெறவுள்ள முத்துராமலிங்கத் தேவர் 63வது குருபூஜையும், 118வது ஜெயந்தி விழாவையும் முன்னிட்டு, அப்பகுதியில் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் இருந்து 8,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்த தலைமை காவலர் கலைவாணி (வயது 41) கமுதிக்கு பணிக்காக வந்திருந்தார். அவர் தங்கியிருந்த தனியார் பள்ளியில் நேற்று இரவு ஓய்வெடுத்தபோது, திடீரென கடும் இருமல் மற்றும் சுவாசக் கோளாறு ஏற்பட்டது. உடனடியாக சக ஊழியர்கள் அவரை ஆம்புலன்ஸ் மூலம் கமுதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர். பின்னர் அவரது உடல் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
பசும்பொன்னில் பாதுகாப்பு பணியில் இருந்தபோது கடமையில் உயிரிழந்த பெண் தலைமை காவலர் கலைவாணியின் மரணம், போலீஸ் துறையிலும் பொதுமக்களிடையிலும் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
female police officer on security duty in Pasumpon died of a heart attack Police in mourning