வரதட்சணை கொடுமை: ஆசிரியை எடுத்த விபரீத முடிவு.! கணவர் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு.!
Teacher commits suicide due to dowry abuse in Karnataka
கர்நாடகா மாநிலத்தில் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தியதால் விஷம் குடித்து ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் விஜயநகர் டவுன் பகுதியை சேர்ந்தவர் ரூபா(34). இவர் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர் பெற்றோர் சம்மதத்துடன் அர்ஜுன் என்பவரை காதலித்து 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் அர்ஜூன், ரூபாவை கூடுதலாக வரதட்சணை வாங்கி வருமாறு கூறி கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.
இதனால் கணவன்-மனைவியிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து இவர்களிடையே மீண்டும் வரதட்சணை தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனவேதனையடைந்த ரூபா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, நேற்று முன்தினம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்து வந்த போலீசார், உயிரிழந்த ரூபாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் அந்த அறையில் சோதனை நடத்தியதில், கடிதம் ஒன்று சிக்கியுள்ளது. அந்த கடிதத்தில், வரதட்சனை கேட்டு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியதால் தற்கொலை செய்து கொள்வதாக ரூபா தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார், கணவர் அர்ஜுன் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Teacher commits suicide due to dowry abuse in Karnataka