மாணவர்கள் பாத்ரூம் கழுவிய சம்பவம்! பள்ளி ஆசிரியர் அதிரடி கைது!! விசாரணையில் பகீர் தகவல்! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பள்ளியில் மாணவர்கள் கழிவறை சுத்தம் செய்த வீடியோ இன்று காலை சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளியில் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் பள்ளி நிர்வாகத்தின் மீதான காழ்ப்புணர்ச்சியால் ஆசிரியர் இமானுவேல் என்பவர் மனநலம் பாதிக்கப்பட்ட மாணவர்களை அழைத்து கழிவறையை சுத்தம் செய்ய வைத்ததோடு அதனை வீடியோ எடுத்து அவரே சமூக வலைதளங்களில் பரப்பியது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் ஆசிரியர் இமானுவேலை திருத்தாங்கல் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான பள்ளியில் மாணவர்களை வைத்து கழிவறைகளை சுத்தம் செய்த சம்பவம் பெரும் அதிர்வலை ஏற்படுத்திய நிலையில் அந்த சம்பவத்தில் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Teacher arrested for students toilet washing incident in sivakasi


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->