10ம் வகுப்பு சிறுமி பாலியல் தொல்லை.. போக்சோவில் கைதான காம கொடூர ஆசிரியர்..!
Teacher arrested for sexually harassing Student
வீட்டிற்கு வர வழைத்து பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், அமரப்பூண்டி பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளியில் தற்காலிக ஆசிரியராக நாட்ராயன் (30) என்பவர் பணியாற்றி வருகிறார்.
இவர் அந்த பள்ளியில் படித்த 10 வகுப்பு மாணவியிடன் நெருங்கி பழகி வந்துள்ளார். அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டுள்ளார். அவருக்கு திருமணமானதை மறைத்து மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார்.
அந்த சிறுமியை வீட்டிற்கு அழைத்து வந்து அவரிடம் அத்து மீறியுள்ளார். அதனால், பயந்து போன அந்த சிறுமி பெற்றோரிடம் இது பற்றி கூறியுள்ளார். இதை அதிர்ச்சியடைந்த அந்த சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் நாட்ராயனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
English Summary
Teacher arrested for sexually harassing Student