தேர்தல் காரணமாக 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்...! - தமிழகத்தில் அதிரடி உத்தரவு
TASMAC shops closed 4 days due elections Action order Tamil Nadu
வருகிற 23ஆம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் பரபரப்பாக மாறியுள்ளது. பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு, அதே நாளில் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தேர்தல் தேதிகள் நெருங்கியுள்ளதால், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் முழு வேகத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த சூழலில், தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகள் தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வாக்குப்பதிவுக்கு முன்பாக இரு நாட்கள் ஆகிய 21ஆம் தேதி முதல், வாக்குப்பதிவு நடைபெறும் 23ஆம் தேதி வரை தொடர்ந்து மூன்று நாட்கள் மதுக்கடைகள் செயல்படாது.
இதனுடன், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4ஆம் தேதியும் சேர்த்து மொத்தம் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நடவடிக்கை தேர்தல் சூழலில் அமைதியும் ஒழுங்கும் நிலவ வேண்டும் என்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
English Summary
TASMAC shops closed 4 days due elections Action order Tamil Nadu