‘ஜன நாயகன்’ சர்ச்சைக்கு நடுவே புதிய அவதாரம் எடுத்த ஹெச்.வினோத்.. சத்தமே இல்லாமல் H. வினோத் செய்த தரமான சம்பவம்!
H Vinoth took on a new avatar amidst the Jana Nayagan controversy A quality incident by H Vinoth without making a sound
தமிழ் சினிமாவில் சமூக அரசியல் பின்னணியிலான விறுவிறுப்பான கதைகளால் தனக்கென தனி இடத்தை பிடித்த இயக்குநர் ஹெச். வினோத், தற்போது புதிய முயற்சியில் இறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘சதுரங்க வேட்டை’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஹெச். வினோத், அதன் பின்னர் ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’, ‘துணிவு’ போன்ற படங்கள் மூலம் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக உயர்ந்தார். குறிப்பாக சமூகத்தில் நடக்கும் அரசியல், பொருளாதார குற்றங்களை தத்ரூபமாகவும், விறுவிறுப்பாகவும் திரையில் சொல்லும் திறமையால் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளார்.
இந்த நிலையில், தற்போது அவர் இயக்கத்தில் நடிகரும் தமிழக முதலமைச்சருமான விஜய் நடித்துவரும் ‘ஜன நாயகன்’ திரைப்படம் இந்திய சினிமா அளவிலேயே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய்யின் அரசியல் வருகைக்குப் பின்னர் உருவாகும் முக்கியமான திரைப்படம் என்பதாலும், தற்போதைய அரசியல் சூழலோடு படம் தொடர்புபடுத்தி பார்க்கப்படுவதாலும், ரசிகர்கள் மத்தியில் இப்படம் குறித்து மிகப்பெரிய ஆர்வம் நிலவி வருகிறது.
சினிமா வட்டாரங்களின் கணிப்புப்படி, ‘ஜன நாயகன்’ திரைப்படம் தமிழ் சினிமாவின் பல வசூல் சாதனைகளை முறியடிக்கும் என்று கூறப்படுகிறது. ஹெச். வினோத்தின் திரைக்கதை அமைப்பு மற்றும் விஜய்யின் மாஸ் திரைநிலை இணையும் போது, படம் தியேட்டர்களில் மிகப்பெரிய கொண்டாட்டத்தை உருவாக்கும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில், ‘ஜன நாயகன்’ திரைப்படம் தொடர்பாக சமீபத்தில் பெரிய சர்ச்சையும் எழுந்தது. படத்தின் சில காட்சிகள் மற்றும் முழு திரைப்படமே இணையத்தில் கசிந்ததாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதுடன், இதுவரை 9 பேரை கைது செய்து விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.
எனினும், படம் இணையத்தில் வெளியானாலும், அதிகாரப்பூர்வ ரிலீஸின் போது ‘ஜன நாயகன்’ மிகப்பெரிய வசூல் சாதனை படைக்கும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடையே தொடர்கிறது.
இந்நிலையில், ஹெச். வினோத் அமைதியாக இன்னொரு முக்கிய முயற்சியிலும் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, அவர் தற்போது தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருப்பதாகவும், அதன் மூலம் முதல் படமாக ‘குற்றம் கடிதல்’ பட இயக்குநர் பிரம்மா இயக்கும் புதிய திரைப்படத்தை தயாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த படத்தில் நடிகர் நட்டி நட்ராஜ் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
‘ஜன நாயகன்’ படத்தின் ரிலீஸ் தொடர்பான பிரச்சனைகள் இன்னும் முழுமையாக முடிவுக்கு வராத சூழலில், ஹெச். வினோத் புதிய தயாரிப்பு முயற்சியில் இறங்கியிருப்பது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்றொரு பக்கம், “முதலமைச்சர் விஜய் நடித்த படம் என்பதால் இனி எந்த ரிலீஸ் சிக்கலும் இருக்காது” என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
English Summary
H Vinoth took on a new avatar amidst the Jana Nayagan controversy A quality incident by H Vinoth without making a sound