பிரச்னையை கையாண்ட விதம் சூப்பர் சிஸ்டர்! டாக்ஸிக்’ விழாவில் நயன்தாராவை புகழ்ந்த யஷ்! - Seithipunal
Seithipunal


கீது மோகன்தாஸ் இயக்கத்தில் ராக் ஸ்டார் யஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘டாக்ஸிக்’. நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, ருக்மணி வசந்த் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. ரவி பஸ்ரூர், விஷால் மிஸ்ரா, தனிஷ் ஆகியோர் இசையமைத்துள்ள இப்படத்தை கே.வி.என் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையொட்டி, படத்தின் பிரம்மாண்ட டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று பெங்களூருவில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் மட்டுமின்றி திரையுலகைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர்.

பொதுவாக தான் நடிக்கும் திரைப்படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகள் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழாக்களில் நயன்தாரா கலந்து கொள்வது மிகவும் அரிது. இதனால், ‘டாக்ஸிக்’ டிரெய்லர் வெளியீட்டு விழாவில் அவர் நேரில் கலந்து கொண்டது ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸாக அமைந்தது.

விழாவில் பேசிய நயன்தாரா, இதுபோன்ற மிகப்பெரிய நிகழ்ச்சிகளில் தன்னால் இயல்பாக இருக்க முடியாது என்பதால்தான் பொதுவாக இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வருவதாக தெரிவித்தார். ஆனால், ‘டாக்ஸிக்’ படத்தின் நாயகன் யஷ் தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அழைத்ததால், அவரது அன்பான அழைப்பை ஏற்று இந்த நிகழ்ச்சிக்கு வந்ததாக நயன்தாரா தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து மேடையில் பேசிய யஷ், நயன்தாராவுக்கு தனது நன்றியைத் தெரிவித்ததோடு, அவரை வெகுவாகப் பாராட்டினார்.

“முதலில் நயன்தாராவுக்கு நன்றி சொல்ல வேண்டும். இந்தக் கதையைத் தேர்வு செய்து நடித்ததற்காக உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. நீங்கள் ஒரு லேடி சூப்பர்ஸ்டார். உங்களுக்கென தனி ரசிகர் கூட்டமும், தனி மார்க்கெட்டும், பல கோடி ரசிகர்களின் அன்பும் இருக்கிறது என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.

நாங்கள் இந்தக் கதையுடன் உங்களை அணுகியபோது, உங்கள் கால்ஷீட் தொடர்பாக சில சிக்கல்கள் இருந்தன. மிகவும் குறுகிய கால அவகாசமே இருந்தது. இருந்தபோதிலும், அனைத்து சிக்கல்களையும் தாண்டி இந்தப் படத்திற்காக நீங்கள் காட்டிய அர்ப்பணிப்பு என்னை வியக்க வைத்தது.

உங்கள் கதாபாத்திரத்திற்காக நீங்கள் கொடுத்த உழைப்பும், படத்திற்கு நீங்கள் சேர்த்த மதிப்பும் அளப்பரியது. படத்தில் ஒரு கெத்தான, மிரட்டலான சகோதரியாக வாழ்ந்திருக்கிறீர்கள். இந்த கதாபாத்திரத்தை அசத்தலாக செய்து முடித்துவிட்டீர்கள்” என்று யஷ் பாராட்டினார்.

மேலும், தன்னைப் போலவே நயன்தாராவும் புரமோஷன் நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்து கொள்வதில்லை என்றும் யஷ் குறிப்பிட்டார். “புரமோஷன்களுக்கு வருவது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. ஆனால் இன்று நயன்தாரா இந்த நிகழ்ச்சிக்காக வந்திருக்கிறார். அதற்காக அவருக்கு என் நன்றி” என்று யஷ் தெரிவித்தார்.

யஷ் மற்றும் நயன்தாரா இடையேயான இந்த அன்பான உரையாடல் தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. குறிப்பாக, பொதுவாக புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்காத நயன்தாரா, யஷின் தனிப்பட்ட அழைப்பை ஏற்று விழாவில் கலந்து கொண்டது ரசிகர்களிடையே ‘டாக்ஸிக்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Yash praised Nayanthara at the Toxic event


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...


செய்திகள்



Seithipunal
--> -->