டாஸ்மாக் மது குவாட்டருக்கு ரூ.10 உயர்த்தப்படுகிறதா?! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் டாஸ்மாக் மது கடைகளின் மூலமாக அரசுக்கு ஆண்டு வருமானமாக சுமார் ரூ. 40 ஆயிரம் கோடி வருகிறது.

2023 மார்ச் 31ஆம் தேதி டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை 5329 ஆக இருந்தது. அண்மையில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள், கல்லூரி, பள்ளிக்கூடம் செயல்படும் பகுதிகளில் செயல்பட்டுவந்த 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. 

500 மது கடைகளை மூடியத்தால் தற்போது தமிழகம் முழுவதும் 4829 டாஸ்மாக் மது கடைகள் செயல்படுகின்றன. 

இந்நிலையில், மதுபானங்களின் விலையை பிராண்டுக்கு ஏற்ப 10 ரூபாய் முதல் 80 ரூபாய் விலை உயர்த்த அரசுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் உலவி வருகிறது.

டாஸ்மாக் மதுபானங்களின் விலையை தற்போது உயர்த்தும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், விலையை உயர்த்த அரசுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக உலாவரும் தகவல் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TASMAC Liquor price may be hike


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->