தமிழக பட்ஜெட் - வெளிமாநிலங்களில் தமிழ் புத்தக திருவிழா.! - Seithipunal
Seithipunal


நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தமிழக சட்டசபையில் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்து வருகிறார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது:

* உலகப்பொதுமறையான திருக்குறளை மேலும் 45 மொழிகளில் மொழிபெயர்க்க ரூ.1.33 கோடியும், 500 தமிழ் இலக்கிய நூல்களை மொழிபெயர்க்க ரூ.10 கோடியும் நிதி ஒதுக்கப்படும்.

* ஓலை சுவடிகளை மின்பதிப்பாக்கம் செய்ய ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 

* சிங்கப்பூர், துபாய், மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் தமிழ் புத்தக கண்காட்சி நடத்திட ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

* தமிழின் தொன்மை தொடர்ச்சியை அறிய மதுரையில் உலகத் தமிழ் கண்காட்சி மையம் அமைக்கப்படும்.

* இந்திய துணை கண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணில் இருந்து தான் தொடங்க வேண்டும்.

* இனி மும்பை, டெல்லி, கொல்கத்தா போன்ற மற்ற நகரங்களிலும் தமிழ் புத்தக திருவிழா நடத்தப்படும்" என்றுத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tamizh book festival in other state minister thangam thennarasu info


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->