தமிழகத்தில் இன்று (24.06.22) முக்கிய பகுதிகளில் மின்தடை.!
TamilNadu today power cut places
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (ஜூன் 24) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
சென்னை
தாம்பரம், போரூர், கிண்டி, தண்டையார்பேட்டை, வியாசர்பாடி, தி.நகர், கே.கே.நகர், பெரம்பூர், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் சென்னையில் சில பகுதிகளில் பராமரிப்பு பணிக்காக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
தூத்துக்குடி
புதுக்கோட்டை, வல்லநாடு, குளத்தூர், பழையகாயல் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை பழுதடைந்த மின்கம்பம் மற்றும் தொய்வான மின்பாதையை சரி செய்யும் பணி நடக்கிறது. இதனால் மேற்கண்ட பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படும்.
சிவகங்கை மாவட்டம்
காரைக்குடி, கானாடுகாத்தான், கல்லல், சாக்கவயல், தேவகோட்டை துணை மின் நிலையங்களில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை உயரழுத்த மின் பாதையில் உள்ள மாற்றப்பட வேண்டிய நிலையில் உள்ள மின்கம்பங்கள் மாற்றும் பணிக்காக மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது.
English Summary
TamilNadu today power cut places