தமிழகத்தில் 3.5 இந்தி தேர்வு எழுத 3.75 லட்சம் பேர் பதிவு!
tamilnadu hindi Exam
தமிழகத்தில் இருமொழிக் கொள்கையாக தமிழ், ஆங்கிலம் பின்பற்றப்பட்டு வரும் நிலையில், விருப்பம் உள்ளோர் மூன்றாவது மொழியாக இந்தியையும் தேர்வு செய்து வருகிறார்கள்.
இந்நிலையில், மாநில மக்களிடையே இந்தி மொழி தேர்வுக்கு எதிரான நிலைப்பாடுகள் இருந்தாலும், இந்தி படிப்பவர்களின் எண்ணிக்கை வருடாண்டு அடிப்படையில் உயர்ந்து வருகிறது.
இந்தி பிரசார சபா நடத்தும் 8 நிலைத் தேர்வுகளை கடந்தாண்டு தமிழகத்தில் மட்டும் 3.5 லட்சம் பேர் எழுதியுள்ளனர். இதே தேர்வுக்கு ஆந்திரத்தில் 1.15 லட்சம் பேர், கர்நாடகம் மற்றும் கேரளாவில் சேர்த்து 25,000 பேர் பங்கேற்றனர். தென் மாநிலங்களை ஒப்பிடும்போது, தமிழகத்தில்தான் தேர்வெழுபவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளதாக கணிக்கப்படுகிறது.
ஜூலை, ஆகஸ்டில் நடைபெறவுள்ள இந்தாண்டு தேர்வுகளுக்காக ஏற்கனவே 3.75 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். இதில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட நகரங்களில் இருந்து பெரும்பாலான விண்ணப்பங்கள் வந்துள்ளன.
இந்தி மீது விருப்பம் கொண்டோரின் எண்ணிக்கை தமிழகம் முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.