உடனே அப்டேட் செய்யலனா அவ்வளவுதான்.. இலவச சிலிண்டர் கிடைக்காது; இணைப்பும் துண்டிக்கப்படலாம்..! - Seithipunal
Seithipunal


பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் இலவசமாக சிலிண்டர் இணைப்புகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் உதவி பெறுவதற்கு அனைத்து பயனாளிகளும் கேஒய்சி சரிபார்ப்பை முடிக்க வேண்டும் என்று அரசு கட்டாயமாக்கியுள்ளது. 

இந்த அப்டேட்டை முடிக்காவிட்டால், உங்கள் சிலிண்டர் இணைப்பு துண்டிக்கப்படலாம். அல்லது  நீங்கள் பெற்றுக் கொண்டிருக்கும் சிலிண்டர் மானியப் பணமும் நின்றுவிட கூடும். சிலிண்டர் திட்டத்தில் நடைபெறும் மோசடியைத் தடுக்கவும், திட்டத்தின் நன்மைகள் உண்மையான மற்றும் தகுதியான பெண்களுக்கு மட்டுமே சென்றடைவதை உறுதி செய்ய மத்திய அரசு இந்த கேஒய்சி சரிபார்ப்பை கட்டாயமாக்கியுள்ளது.

குறித்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் பெண்ணின் வயது 18 வயது அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும் என்றும், வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அத்துடன்,ரேஷன் கார்டில் பெயர் பதிவு செய்யப்பட்ட பெண்கள் தகுதியுடையவர்களாகக் கருதப்படுவதோடு, ஏற்கனவே சிலிண்டர் இணைப்பு உள்ளவர்கள் இந்தத் திட்டத்தில் பயன்பெற முடியாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை பெற குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ. 02 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ், பெண்கள் மலிவு விலையில் சிலிண்டர்களைப் பெற முடியும். தற்போது, லட்சக்கணக்கான பெண்கள் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.  அதன்படி, அனைத்து பயனாளிகளும் கேஒய்சி சரிபார்ப்பை முடிக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்தியுள்ளது.

அதற்கு, ஆதார் அட்டை, வங்கி பாஸ்புக், ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண், சிலிண்டர் இணைப்பு எண் என இந்த ஆவணங்கள் அனைத்தையும் தயாராக வைத்திருந்தால் கேஒய்சி சரிபார்ப்பு செயல்முறையை எளிதாக முடிக்க முடியும்.

ஆன்லைன் மூலமாக கேஒய்சி சரிபார்ப்பு செயல்முறைக்கு பின்பற்ற வேண்டிய  வழிமுறைகள்:

முதலில் உங்கள் சிலிண்டர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைத் திறக்க வேண்டும்.

வலைத்தளத்தின் முகப்பு பக்கத்தில் ‘eKYC’ ஆப்சன் இருக்கும். அதை கிளிக் செய்ய வேண்டும். 

இப்போது உங்கள் முன் ஒரு புதிய பக்கம் திறக்கும். அதில் நீங்கள் ஆதார் எண் மற்றும் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும். 

தகவலை உள்ளிட்ட பிறகு, ‘Get OTP’ விருப்பத்தைக் கிளிக் செய்ய வேண்டும். 

உடனே பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும். அதைப் பதிவிட்டு சமர்ப்பிக்க வேண்டும். 

இந்த வழிமுறைகளை முடித்த பிறகு, உங்கள் கேஒய்சி சரிபார்ப்பு செயல்முறை முடிந்துவிடும்.

ஆஃப்லைன் செயல்முறை:

அருகிலுள்ள சிலிண்டர் நிறுவனம் அல்லது பொதுச் சேவை மையத்துக்குச் செல்ல வேண்டும். 

உங்கள் ஆதார் கார்டின் நகல் மற்றும் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண் கையில் இருக்க வேண்டும். 

சிலிண்டர் நிறுவனம் அல்லது பொதுச் சேவை மையத்தில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரியிடமிருந்து கேஒய்சி சரிபார்ப்பு விண்ணப்பப் படிவத்தைப் பெற வேண்டும். 

தேவையான அனைத்து தகவல்களையும் (பெயர், முகவரி, எரிவாயு இணைப்பு எண் மற்றும் ஆதார் எண் போன்றவை) அந்தப் படிவத்தில் சரியாக உள்ளிட வேண்டும். 

அனைத்து தகவல்களையும் நிரப்பிய பிறகு, உங்கள் ஆவணங்களின் நகல்களை அட்டை) படிவத்துடன் இணைக்க வேண்டும். 

இப்போது நிரப்பப்பட்ட படிவம் மற்றும் இணைக்கப்பட்ட ஆவணங்களை சிலிண்டர் நிறுவனம் அல்லது பொதுச் சேவை மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலம் பயனாளிகளின் கேஒய்சி சரிபார்ப்பு செயல்முறையை ஆஃப்லைன் முறையில் முடித்துவிடலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

To get the free cylinder you need to update your KYC verification otherwise you will not get the free cylinder


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->