ரணில் விக்ரமசிங்கேவை கைது செய்திருப்பது 'இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை' - க்கு சசி தரூர் கண்டனம்
Shashi Tharoor condemns Ranil Wickremesinghe arrest calling it political vendetta
இலங்கையின் முன்னாள் அதிபரும், ஆறு முறை பிரதமருமான ரணில் விக்ரமசிங்கே (76), அரசு நிதியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விக்ரமசிங்கே, சிஐடி தலைமையகத்தில் விசாரணைக்காக ஆஜராகியபோது, அதிகாரிகள் அவரை கைது செய்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.
குற்றச்சாட்டு என்னவெனில், கடந்த 2023ஆம் ஆண்டு, தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள, இங்கிலாந்து சென்றபோது அரசு நிதியை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
பொருளாதார நெருக்கடியின் போது அதிபர்
2022ஆம் ஆண்டு இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அதிபர் கோதபய ராஜபக்சே பதவி விலகிய நிலையில், அதனைத் தொடர்ந்து ரணில் விக்ரமசிங்கே அதிபராக பதவி ஏற்றார். அவர் 2022 முதல் செப்டம்பர் 2024 வரை நாட்டின் அதிபராக இருந்தார்.
இதற்கு முன்பு, அவர் ஆறு முறை பிரதமர் பொறுப்பையும் வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியல் எதிர்ப்புகள்
விக்ரமசிங்கேவின் கைது இலங்கை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்துக்கு இந்திய காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் (X) பதிவில்,
“இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே அற்பமான குற்றச்சாட்டுகளின் பேரில் கைதாகி இருப்பது கவலை அளிக்கிறது. தற்போதைய இலங்கை அரசு பழிவாங்கும் அரசியலைக் கைவிட்டு, அவரைக் கண்ணியத்துடன் நடத்த வேண்டும்”
என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர், முன்னாள் அதிபர் கோதபய ராஜபக்சேயும் இந்த கைது நடவடிக்கையை கண்டித்திருந்தார்.
“இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. சிறிய தவறுக்காக சிறையில் வைக்கப்பட்டிருப்பது வருத்தமாக உள்ளது”
என்று செய்தியாளர்களிடம் அவர் கருத்து தெரிவித்தார்.
சர்ச்சைக்குரிய கைது
விக்ரமசிங்கேவின் கைது, இலங்கையின் தற்போதைய ஆட்சியில் அரசியல் பழிவாங்கல் குறித்த குற்றச்சாட்டுகளை மீண்டும் தூண்டியுள்ளது. இதனால் அந்நாட்டு உள்நாட்டுப் அரசியலில் புதிய அதிர்வலைகள் எழுந்துள்ளன.
English Summary
Shashi Tharoor condemns Ranil Wickremesinghe arrest calling it political vendetta