கோவை விமான நிலையத்தில் மீண்டும் அதிர்ச்சி சம்பவம்: சோதனையில் சிக்கிய துப்பாக்கித் தோட்டா: ஷூவில் மறைத்த சென்ற கேரளா பயணி...!
Kerala passenger hides bullet in shoe at Coimbatore airport
கோவை விமான நிலையத்தில் இருந்து பெங்களூருக்கு இண்டிகோ நிறுவனத்தின் பயணிகள் விமானத்தில் செல்ல இருந்த பெண் பயணி ஒருவரிடம் எம்எம் ரக தோட்டா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்று கேரள பயணியிடம் இருந்து மற்றுமொரு துப்பாக்கித் தோட்டா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை விமான நிலையத்திற்கு கேரள மாநிலம் கொச்சினைச் சேர்ந்த ஷிபு மேத்யூ என்பவர் வந்திருந்தார். இவர் அபுதாபி செல்ல இருந்தார். அவரின் உடமைகளை மத்திய தொழில் பாதுகாப்புப் படை பிரிவினர் சோதனையிட்டனர்.

அப்போது ஷிபு மேத்யூ அணிந்திருந்த ஷூவையும் சோதனைக்கு உட்படுத்திய போது, அதனுள் துப்பாக்கித் தோட்டா பதுக்கி வைத்திருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். உடனடியாக அவரை தனிமைப்படுத்தி அதிகாரிகள் விசாரணை நடத்திய பிறகு, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், ஷிபு மேத்யூவிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
மேலும் குறித்த பயணி தோட்டாவை மறைத்து கொண்டு வந்ததன் நோக்கம் என்ன என்பது பற்றி பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்றுய் வருகின்றது. இந்த சம்பவத்தால் கோவை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியமை குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே கோவை விமான நிலையத்தில் பெண் பயணி ஒருவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நிலையில் மீண்டும் அதே போல ஒரு சம்பவம் தற்போது நிகழ்ந்துள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
English Summary
Kerala passenger hides bullet in shoe at Coimbatore airport