#Breaking: இன்று தமிழகத்தில் 5,325 பேருக்கு கொரோனா உறுதி..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனா வைரஸின் பரவல் தொடர்ந்து அதிகரித்து வந்தது.. தினமும் அதிகரித்து கொண்டு வந்த கொரோனா பரவலின் காரணமாக மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். அரசும் சோதனைகளை அதிகப்படுத்தி கொண்டே வந்ததன் எதிரொலியாக, கொரோனா பரவல் தொடர்ந்து குறைந்து வருகிறது.

நேற்றுவரை கொரோனாவால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,52,674 ஆக இருந்தது. இதுவரையிலும் பூரண நலன் பெற்றவர்களின் எண்ணிக்கை 4,97,377 ஆக இருந்தது. மொத்த பலி எண்ணிக்கை 8,947 ஆக இருந்தது..

இந்த நிலையில், இன்று கொரோனாவால் 5,325பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,57,999 ஆக உயர்ந்துள்ளது. இன்று 5,363 பேர் பூரண நலன் பெற்றதையடுத்து, இதுவரையிலும் பூரண நலன் பெற்றவர்களின் எண்ணிக்கை 5,02,740 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 63 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 9,010 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று மேலும் 989 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,57,614 ஆக உயர்ந்துள்ளது.

துவக்கத்தை விட கொரோனா பாதிப்பு தற்போது அதிகரித்து இருந்தாலும், மக்களின் ஒத்துழைப்பு மற்றும் அரசின் நடவடிக்கை காரணமாக கொரோனா கட்டிற்குள் வருகிறது. இதில் ஆறுதல் விஷயமாக குணமடைவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu Corona Virus Update 23 September 2020


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->