மத்திய அரசுக்கு எதிரான வழக்கு! தமிழக அரசுக்கு அதிர்ச்சி கொடுத்த உச்சநீதிமன்றம்! - Seithipunal
Seithipunal


தமிழக அரசுக்கு கல்வி நிதியாக வழங்க வேண்டிய ₹2,151 கோடியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதாகக் கூறி, அதை விடுவிக்கக் கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

மும்மொழிக் கொள்கையை ஏற்காததால் நிதி பிடுங்கப்பட்டதாகவும், இது கல்வி திட்டங்களை பாதிக்கக்கூடியதாக இருப்பதாகவும் தமிழக அரசு புகார் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிராஷாந்த் குமார் மிஷ்ரா மற்றும் மன்மோகன் குழு இன்று பரிசீலித்தது.

ஆனால், இந்த வழக்கின் தன்மை அவசர நிலை இல்லை என்றும், கோடை விடுமுறைக்குப் பிறகு விசாரிக்கலாம் என்றும் அவர்கள் கூறினர்.

மத்திய நிதியமைச்சகத்தின் நடவடிக்கையை கடுமையாக எதிர்க்கும் வகையில், தமிழக அரசு கடந்த மாதமே மனுத் தாக்கல் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Supreme Court TN Govt Education


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->