பகீர்! காயங்களுடன் மாணவர்கள்!சாலையில் உருண்டு ஓடிய அரசு பேருந்தின் பின் சக்கரங்கள்...!
Students with injuries rear wheels government bus that rolled on road
மதுரை மாவட்டத்திலிருந்து குற்றாலம் நோக்கி இன்று காலை அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்தை வத்திராயிருப்பு பகுதியை சேர்ந்த 55 வயதான 'சங்கரன்' என்பவர் ஓட்டி சென்றார்.

இந்த பேருந்து தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இடைகால் பகுதியிலுள்ள மதுரை-தென்காசி தேசிய நெடுஞ்சாலை சென்றபோது திடீரென சக்கரத்தின் அச்சு முறிந்தது.இதனால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்தின் பின் பக்கத்திலுள்ள 2 சக்கரங்களும் தனியாக கழன்று சாலையில் உருண்டோடியது.
எனவே பேருந்தின் பின்பக்கம் அமர்ந்திருந்த 3 மாணவர்கள் உள்பட பேருந்தில் இருந்த 40 பயணிகளும் பேருந்தின் உள்ளே தூக்கி வீசப்பட்டனர். இதில் பின்பகுதியிலிருந்த 3 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.இதுபற்றிய தகவலறிந்து சம்பவ இடத்திற்கு காவலர்கள் விரைந்து சென்று மாணவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதில் மற்ற பயணிகள் பாதுகாப்பாக மாற்று பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.இந்த சம்பவத்தின்போது பின்னால் வேறு பேருந்துகள் வராததால் அதிர்ஷ்டவசமாக மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
இதுத் தொடர்பாக ஆய்க்குடி காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அரசு பேருந்தின் சக்கரம் கழன்று சாலையில் ஓடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Students with injuries rear wheels government bus that rolled on road